Paristamil Navigation Paristamil advert login

மெற்றோ சுரங்கத்துக்குள் சடலம்! - விசாரணைகள் ஆரம்பம்..!!

மெற்றோ சுரங்கத்துக்குள் சடலம்! - விசாரணைகள் ஆரம்பம்..!!

19 ஆவணி 2025 செவ்வாய் 20:08 | பார்வைகள் : 1997


பரிசில் உள்ள மெற்றோ சுரங்கம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரண்டாம் இலக்க மெற்றோ சுரங்கத்தில் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் ஆபிரிக்க நாடான Chad இனைச்  சேர்ந்தவர் எனவும், 25 வயதுடைய Abdel M என பெயருடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவருடைய குடும்பத்தாரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சடலம் மீட்கப்பட்டதை அடுத்து Courcelles தொடருந்து நிலையத்தில் போக்குவரத்து தடைப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்