தென்னிந்தியாவில் வெகு விரைவில் புல்லட் ரயில் சேவை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
31 ஆவணி 2025 ஞாயிறு 06:07 | பார்வைகள் : 1317
ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
மிக விரைவில் தென்னிந்தியாவுக்கு புல்லட் ரயில் சேவை வர இருக்கிறது. இதுபற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த புல்லட் ரயில், ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு நகரங்களை இணைக்கும்.
5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மிக பெரிய சந்தையாக மாறும். இது நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
முன்னதாக, மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2027ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், குஜராத்தில் இந்த ரயில் திட்டங்களுக்கான ரயில் நிலையங்கள் கட்டுமானங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறி இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan