"கல்விக்காக ஒதுக்கும் பணத்தில் சேமிப்பது வெட்கக்கேடானது": மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்!!
27 ஆடி 2025 ஞாயிறு 22:12 | பார்வைகள் : 3657
ஸ்டிராஸ்பர்க் (Strasbourg) கல்வி நிர்வாகம், நிதியின்மையின் காரணமாக, கடந்த 41 ஆண்டுகளாக எல்சாசிய பள்ளிகளில் (les lycées alsaciens) நடைபெற்று வந்த "பிராந்திய மொழி மற்றும் கலாசார" தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு கோடை விடுமுறையில் அறிவிக்கபட்டதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
உதாரணமாக, ரோபாக் வேளாண்மை உயர்நிலைப் பாடசாலையின் (lycée agricole de Rouffach) மாணவர் லோயிக் ஹெஃபெல், ஐந்தாம் வகுப்பிலிருந்து இந்த தேர்வை தொடர்ந்து வந்துள்ளார். அவர் அதனை பக்கில் பயன்படுத்த முடியாமல் போவதை வருத்தத்துடன் கூறியுள்ளார். அவரது தாயார் கூறுவதைப் போலவே, "ஏற்கனவே அல்சாசிய மொழி மறைந்துவருகிறது; இப்போது இந்த தேர்வும் நீக்கப்படுவது புரியாத விஷயம்" என்றார்.
இந்த ஆண்டில் மட்டும் 589 உயர்நிலை மாணவர்களும் 3,900 நடுநிலை மாணவர்களும் இந்த தேர்வைப் பின்பற்றியுள்ளனர். மாணவர்கள் இதன்மூலம் எல்சாசின் வரலாறு, கலாசாரம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொண்டுள்ளனர்.
ஆனால், தற்போதைய கல்வி நிர்வாகம் பிரெஞ்சு-ஜெர்மன் இருமொழித் திறனை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. இதனால், உள்ளூர் மரபை பாதுகாக்கும் வகையில் உள்ள தேர்வு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது "கல்வியில் சேமிக்க வேண்டிய நிலையா?" என்ற கேள்வியை எழுப்புகிறது. மாணவர்களும் பெற்றோர்களும் இந்த முடிவை எதிர்த்து வருத்தம் தெரிவித்து வருன்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan