பரிஸில் பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் கொள்ளையடிப்பு!!
27 ஆடி 2025 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 2310
பரிஸின் 14வது வட்டாரத்தில், இரண்டு பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஏர்பிஎன்பி (Airbnb) வாடகை வீட்டில் சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் வாசலைத் தட்டி, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, அவர்களை முழங்காலில் அமர வைத்து கழுத்துக்கு கத்தி வைத்து மிரட்டி, 6 ஐபோன்கள் மற்றும் 80 யூரோக்கள் பணத்தை பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை ஆனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், பரிஸில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் "home-jacking" எனப்படும் வீட்டு கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஒன்றாகும்.
2023இல் பரிஸ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 515 சம்பவங்களும் 2024இல் இது 550 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. விசாரணை அதிகாரிகள் இந்த குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025இல் மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan