பரிஸில் பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் கொள்ளையடிப்பு!!
27 ஆடி 2025 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 2521
பரிஸின் 14வது வட்டாரத்தில், இரண்டு பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஏர்பிஎன்பி (Airbnb) வாடகை வீட்டில் சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் வாசலைத் தட்டி, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, அவர்களை முழங்காலில் அமர வைத்து கழுத்துக்கு கத்தி வைத்து மிரட்டி, 6 ஐபோன்கள் மற்றும் 80 யூரோக்கள் பணத்தை பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை ஆனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், பரிஸில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் "home-jacking" எனப்படும் வீட்டு கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஒன்றாகும்.
2023இல் பரிஸ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 515 சம்பவங்களும் 2024இல் இது 550 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. விசாரணை அதிகாரிகள் இந்த குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025இல் மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan