பூங்காவினுள்ள ஆடைகளற்ற நிலையில் காயங்களுடன்! - ஆயுதக்குழுக்களின் தாக்குதல்!
4 ஆவணி 2025 திங்கள் 12:45 | பார்வைகள் : 2612
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, 4 இரவு மொன்பெலியேவில் நடைபெற்றுள்ளது.
ஆடைகற்ற நிரையில் படுகாயங்களுடன் இரண்டு ஆண்கள், அதில் ஒருவரே 16 வயதிற்கும் குறைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குற்வாளிகள் என அறியப்படும் நால்வர் காவற்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.
பலத்த காயங்களை ஏற்படுத்திய ஆண்களுடைய சிற்றுந்து புறநகர் பகுதியின் அருகில் நின்றுள்ளது.
சில சாட்சிகளின் கூற்றின்படி, இரண்டு ஆண்கள் நிர்வாண நிலையில் இருந்தனர். அவர்கள் நான்கு ஆயுததாரிகளால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இந்த இரு ஆண்களும் (ஒருவரின் வயது குறிப்பிடப்படவில்லை) காயங்களுடன் தாழ்வு பகுதியில் காணப்பட்டனர், என்றும் காவற்துறையின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருள் பறிப்பு, கொலை மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றின் பின்னணியில் இந்த சம்பவம் ஆரம்பித்து இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
la Mosson என்ற பகுதியில், துப்பாக்கி மற்றும் AK 47 போன்ற ஆயுதங்களுடன் அந்த நான்கு ஆண்கள் அவர்கள் கொடுமையுடன் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று வரை விசாரணை முடிவடையவில்லை, ஆனால் ஊடக செய்திகள் தொடர்புடைய சர்வதேச போதைப்பொருட் கடத்தல் தொடர்புகளை முற்றிலும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த விசாரணையில், காவற்துறையினர், ஜோந்தார்மினர் மற்றும் RAID அதிரடிப்படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வளவு படையினர் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தது போல் பெரும் குற்றக் குழுக்களின் நடவடிக்கையாகவே இருக்கும் எனவே தோன்றுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan