கனடாவில் காட்டுத்தீ - ட்ரோன்களைப் பயன்படுத்தும் அரசாங்கம்
2 ஆடி 2025 புதன் 19:30 | பார்வைகள் : 1763
கனடாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட பேரழிவை சரிசெய்ய கனடா அரசாங்கம் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது.
2023-ஆம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பேரழிவான காட்டுத்தீயால் மில்லியனக்கணக்கான ஹெக்டேர் வனங்கள் அழிந்தன.
குறிப்பாக, கியூபெக் மாநிலத்தின் வடக்கு பகுதி மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக கனடா தற்போது ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுவனமாக்கலை (Reforestation) மேற்கொள்கிறது.
Flash Forest எனும் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில், ட்ரோன்கள் மூலம் நாளொன்றிற்கு 50,000 விதைகள் கொண்ட காப்சூல்கள் மண்ணில் நறுக்கப்படுகின்றன.
இதில் நீர், ஊட்டச்சத்துகள் மற்றும் பூஞ்சைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், விதைகள் நன்றாக வளர வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த விதைகள் சாதாரணமாக மண் மீது வீசப்படுவதில்லை. முந்தைய காட்டுத்தீ தாக்கத்துக்குள்ளான பகுதிகள், காலநிலை மற்றும் நில அமைப்பு ஆகியவற்றை AI தொழில்நுட்பம் மூலமாக முன்பே கணக்கிட்டு, சரியான இடங்களில் விதைகள் தூவப்படுகின்றன.
இந்த முயற்சியில் Cree இனத்தினர் போன்ற மூலவர்களும் நேரடியாக பங்கேற்கின்றனர். "நம்முடைய வனங்கள் அழிந்துவிட்டது வருத்தமளிக்கிறது, ஆனால் இப்போது புதிய முறையில் மீட்பு முயற்சி நடப்பது நம்மை மகிழ்விக்கிறது," என அந்த சமூகத்தின் தலைவி கூறியுள்ளார்.
இத்தகைய முயற்சிகள் வனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வழிகாட்டுகின்றன. எனினும், விதை பற்றாக்குறை மற்றும் விதைகள் வீணாகும் சாத்தியம் போன்ற சவால்களும் உள்ளதாக வன உயிரியல் பேராசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan