Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் ,அணு விஞ்ஞானிகளின் இறுதி ஊர்வலம்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் ,அணு விஞ்ஞானிகளின் இறுதி ஊர்வலம்

29 ஆனி 2025 ஞாயிறு 08:53 | பார்வைகள் : 6790


இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலில்  ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் ,அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலில் கொல்லப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் ,அணு விஞ்ஞானிகளின் உடலங்களுக்கான இறுதி ஊர்வலம் நேற்று (28) இடம்பெற்றது.

தெஹ்ரானில் உள்ள ஆசாதி சதுக்கத்தில் அவர்களுடைய புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடிகளுடன் உடலங்கள் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டன.

இறுதி ஊர்வலத்தில் ஈரான் ஜனாதிபதி மன்சூர் பெஜஸ்கியான் மற்றும் புரட்சி படையின் தலைவர் குவானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோன்று, இவ் இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்களும் கலந்து கொண்டனர்.