மாவட்ட கல்வி அதிகாரியாக இந்திய கிரிக்கெட் வீரர்
27 ஆனி 2025 வெள்ளி 15:58 | பார்வைகள் : 2800
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் பிறந்த ரிங்கு சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி பிரபலமானார். இதன் காரணமாக KKR அணி, அவரை ரூ..13 கோடிக்கு ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து கொண்டது.
இவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், உத்திரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாடி கட்சி எம்.பியான பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், சர்வதேச பதக்கம் வென்றவர்கள் நேரடி ஆட்சேர்ப்பு விதிகள்-2022 இன் கீழ் ரிங்கு சிங்வை மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரியாக (BSA) உத்தரபிரதேச மாநில அரசு நியமித்துள்ளது.
ஒரு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை அரசுப் பள்ளிகளை மேற்பார்வையிடுவது, அடிப்படைக் கல்வி அலுவலரின் பொறுப்பு ஆகும்.
இதில் ஊழியர்களை நிர்வகித்தல், கல்வித் திட்டங்கள் சீராகச் செயல்படுவதை உறுதி செய்தல் மற்றும் தரத் தரங்களைப் பராமரிக்க பள்ளிகளை ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.
ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ரிங்கு சிங், வறுமை காரணமாக தனது கல்வியை 9 ஆம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவரின் தந்தை, சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதே போல், தோனி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு நிறுவனத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan