புலம்பெயர்ந்தோர் மீட்புக் குழுக்களுக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஜெர்மனி
26 ஆனி 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 2899
ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான மக்களள் படகுகளின் ஊடாக வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மனிக்கு வரும் அகதிகள் தொடர்பில் பல சட்ட திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகதிகள் ஆதரவு நடவடிக்கை ஒன்றை நிறுத்த ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடலில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை மீட்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இனி நிதி உதவி செய்யப்போவதில்லை என ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியதரைக் கடல் வழியாக புலம்பெயர்வோர் கடலில் தத்தளிக்கும்போது அவர்களை மீட்கும் குழுக்களுக்கு, நிதி வழங்குதை நிறுத்த ஜேர்மனி திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நிதியமைச்சர் Lars Klingbeilஇன் புதிய பட்ஜெட் திட்டங்களில், புலம்பெயர்ந்தோர் மீட்புக் குழுக்களுக்கு பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
ஜேர்மன் அராசாங்கம், ஆண்டொன்றிற்கு 2 மில்லியன் யூரோக்கள் வரை புலம்பெயர்ந்தோர் மீட்புக் குழுக்களுக்கு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan