பிரித்தானியாவின் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்
17 ஆனி 2025 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 3389
பிரித்தானியாவின் உளவு அமைப்பின் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவின் எம்.ஐ., - 6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, 'சி' என்று குறிப்பிடுவர்.
இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும்.
மற்றபடி, அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் இரகசியமாக பேணப்படும். தற்போதைய தலைவரான சர் ரிச்சர்ட் மூரே, விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
இதையடுத்து, உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள பிளேசி மெட்ரவெலி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் எம்.ஐ., - 5 உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை இவர் வகித்துள்ளார்.
கடந்த 1999 முதல் அவர், உளவு அமைப்பில் பணியாற்றி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan