கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

9 ஆனி 2025 திங்கள் 07:08 | பார்வைகள் : 1617
தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் கொலம்பியா தலைநகர் போகோட்டா நகரம் குலுங்கியது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெர்மனியின் GFZ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியது.
சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1