Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்ப்பு

20 வைகாசி 2025 செவ்வாய் 09:18 | பார்வைகள் : 7863


இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் மேற்கு கரை (West Bank) பகுதிகளில் விரிவாக்கும் இராணுவ நடவடிக்கைகளையும், மனிதாபிமான தடைகளைவும் கடுமையாகக் கண்டிப்பதாக கனடா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

தேவையானவையாக இருந்தால் தண்டனைகள் உட்பட தீர்வுகளுக்குச் செல்ல தயாராக இருப்பதாக மூன்று நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றில் தெரிவித்தன.

மூன்று நாடுகளின் பிரதமமர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

“இஸ்ரேல், காசாவிற்குள் குறைந்த அளவு உணவை அனுமதிக்க முடிவு செய்தது முற்றிலும் போதியதல்ல.

அங்கு ஏற்படும் மனிதவியல் துன்பம் ஏற்க முடியாத அளவுக்கு சென்றுவிட்டது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இஸ்ரேல் உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால், மேலும் கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலுக்கு தன்னைத் தானே பாதுகாப்பதற்கான உரிமை இருப்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்