உக்ரைனின் நிகோபோலில் ரஷ்ய பீரங்கித் தாக்குதல்-இருவர் பலி
17 சித்திரை 2025 வியாழன் 17:29 | பார்வைகள் : 2895
உக்ரைனின் நிகோபோலில் ரஷ்யா நடத்திய பீரங்கித் தாக்குதல் இருவர் பலியாகியுள்ளனர்.
தெற்கு உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நிகோபோல் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த கொடூரமான தாக்குதலில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அப்பகுதி ஆளுநர் செர்ஹி லிசாக் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 56 மற்றும் 61 வயதுடைய ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஐந்து பேரில் நான்கு பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு மிக அருகில், டினிப்ரோ நதியின் கரையில் அமைந்துள்ள நிகோபோல் நகரம், ரஷ்ய படைகளின் தொடர்ச்சியான பீரங்கி மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையற்ற சூழல் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, இதே பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் நடத்தப்பட்ட ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கெர்சன் நகர மேயர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த துயரமான சம்பவங்கள், முன்னதாக டினிப்ரோ நகரில் ரஷ்ய படைகள் நடத்திய பாரிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன.
அந்த ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 30 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan