பரிஸ் நகரபிதா மீது வழக்கு.. - தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!
19 ஐப்பசி 2024 சனி 15:49 | பார்வைகள் : 11776
பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பரிஸ் நகரசபை வழமைக்கு மீறிய உணவுச் செலவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. மூன்று தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து, விளக்கம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. அவ்வருடத்தில் நகரசபை மொத்தமாக €16,881.72 யூரோக்கள் செலவு செய்திருந்ததாக மேற்படி வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்றம், இன்று ஒக்டோபர் 19, சனிக்கிழமை வழக்கை தள்ளுபடி செய்தது.
2020 ஆம் ஆண்டில் ஆன் இதால்கோ உணவுச் செலவாக 2,838.24 யூரோக்கள் மட்டுமே செலவு செய்ததாக தெரிவித்து, அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கியிருந்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan