Yvelines : ஆசிரியரைத் தாக்கிய மாணவன் - பாடசாலையில் பரபரப்பு!!
19 ஐப்பசி 2024 சனி 05:11 | பார்வைகள் : 9623
வகுப்பறையில் வைத்து மாணவன் ஒருவர் ஆசிரியரைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Maurepas (Yvelines) நகரில் இச்சம்பவம் ஒக்டோபர் 18, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள collège Alexandre Dumas de Maurepas பாடசாலையில் உயர்கல்வி மாணவன் ஒருவர், அவரது ஆசிரியரைத் தலையில் தாக்கியுள்ளார்.
அதை அடுத்து வகுப்பறை முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. பாடசாலையில் பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு மாணவன் தனியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
மாணவனின் பெற்றோர் அழைக்கப்பட்டார். இந்த தாக்குதல் செய்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகனின் இந்த நடவடிக்கை குறித்து அவர் கவலையுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை தரப்பு வழக்கு பதிவுசெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan