பரிஸ் : வாகனம் மோதி பெண் பலி.. சாரதி கைது!
9 ஐப்பசி 2024 புதன் 12:47 | பார்வைகள் : 17335
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வானகம் ஒன்று மோதியதில் 72 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 அளவில் இச்சம்பவம் Rue Manin வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் வேகமாக பயணித்த ட்ரக் பார ஊர்தி ஒன்று பாதசாரி கடவை ஒன்றில் நடந்து சென்ற குறித்த பெண்ணை மோதி தள்ளி அவர் மீது ஏறிச் சென்றுள்ளது. வாகனத்துக்குள் சிக்குண்ட அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். SAMU மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
வாகன சாரதி கைது செய்யப்பட்டார். மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் மதுபானம் அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் எந்த ஒரு கண்காணிப்பு கமராக்களும் இல்லாத நிலையில், விபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan