ஒரே இரவில் 700 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணம்..!

22 புரட்டாசி 2024 ஞாயிறு 15:46 | பார்வைகள் : 12031
செப்டம்பர் 21, சனிக்கிழமை பிரான்சில் இருந்து 702 அகதிகள் பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இதுபோன்ற சட்டவிரோத பயணம் அதிகரித்துள்ளதாகவும், பிரான்சின் பா-து-கலே மாவட்டத்தின் கடற்கரைகளில் இருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பல்வேறு படகுகளில் அகதிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கடந்தவார சனிக்கிழமை செப்டம்பர் 14 ஆம் திகதி ஒரே இரவில் 802 அகதிகள் இதுபோல் பிரித்தானியா நோக்கி பயணித்திருந்தனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இவ்வருடம் இந்த கடற்பயணங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1