Yvelines : கத்திக்குத்தில் ஒருவர் பலி!

21 புரட்டாசி 2024 சனி 11:00 | பார்வைகள் : 12005
Brunoy (Essonne) நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Brunoy மற்றும் அருகில் உள்ள Ris-Orangis நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு மோதலில் ஈடுபட்டனர். அதன் போது கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றது. அதில் 30 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். 27 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு நகரங்களையும் பிரிக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது,
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1