சரவதேச பிடியாணை.. டெலிகிராம் செயலியின் உரிமையாளர் பிரான்சில் கைது..!
25 ஆவணி 2024 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 9700
தொலைபேசிகளில் குறுந்தகவல்கள் மற்றும் இலவச அழைப்புக்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் டெலிகிராம் (Telegram) செயலியின் உரிமையாளர் Pavel Durov, நேற்று பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அவர், பிரான்ஸ்-இரஷ்ய குடியுரிமை கொண்டவராவர். குறுந்தகவல்களை பெறும் இரு நபர்களால் மட்டுமே பெறக்கூடிய chiffrée (ஆங்கிலத்தில் : End-to-End Encrypted) முறையில் இயங்கக்கூடிய குறித்த செயலியினை உருவாக்கிய அவர் ஒரு பில்லியனாவார். எப்போதாவது இருந்துவிட்டு பிரான்சுக்கு வரும் அவர் நேற்று ஓகஸ்ட் 24 ஆம் திகதி சனிக்கிழமை Le Bourget விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொழில், பயங்கரவாதம் போன்ற குற்றச்செயல்களுக்கு குறித்த செயலி துணைபோவதாக அவர்மீது பிரான்ஸ் சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது. அதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan