Essonne : பாடசாலை பேருந்துடன் மோதிய மகிழுந்து.. ஒருவர் பலி..!
2 ஆடி 2024 செவ்வாய் 21:31 | பார்வைகள் : 10230
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்றுடன் மகிழுந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஜூலை 2, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Courances (Essonne) நகரில் இடம்பெற்றது. நண்பகல் வேளையில் D372 சாலையில் பயணித்த பாடசாலை பேருந்தும், மகிழுந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்து சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். பேருந்து சாரதில் இலேசான காயங்களுக்கு உள்ளானார்.
அதிஷ்ட்டவசமாக பேருந்தில் மாணவர்கள் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை அடுத்து சிலமணிநேரம் RD372/RD948 சாலைகளை இணைக்கும் சுற்றுவட்ட பகுதி மூடப்பட்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan