Paristamil Navigation Paristamil advert login

■ பதவி விலகலின் பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும் கப்ரியல் அத்தால்..!!

■ பதவி விலகலின் பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும் கப்ரியல் அத்தால்..!!

16 ஆடி 2024 செவ்வாய் 16:37 | பார்வைகள் : 18586


கப்ரியல் அத்தால் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்.

இன்று காலை எலிசே மாளிகையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து, தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதியிடம் வழங்கியிருந்தார் கப்ரியல் அத்தால். அதனை மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் இயங்கும்.

இந்நிலையில், இன்று ஜூலை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு TF1 தொலைக்காட்சியில் கப்ரியல் அத்தால் உரையாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடகங்களிலும் இதனை நேரடியாக காண முடியும்.