செங்கடலில் இரு ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய பிரெஞ்சு போர்க்கப்பல்!!
20 மாசி 2024 செவ்வாய் 17:11 | பார்வைகள் : 9555
செங்கடலில் (Red Sea) நிலைகொண்டுள்ள பிரெஞ்சு போர்க்கப்பல்களை நோட்டமிட்ட இரு ஆளில்லா விமானங்களை (ட்ரோன் கருவிகள்) பிரெஞ்சு இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ஹூதிஸ் அமைப்பினருக்கு சொந்தமாக விமானங்களே அவையாகும். செங்கடலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஹூதிஸ் பயங்கரவாதிகள், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதையடுத்து சர்வதேச போக்குவரத்துக்கள், வணிகங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில், பெப்ரவரி 19 ஆம் திகதி, நேற்று திங்கட்கிழமை இரண்டு ட்ரோன் விமானங்களை பிரெஞ்சு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இத்தகவலை இன்று பிரெஞ்சு இராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
யேமன் (Yemen) நாட்டில் இருந்து இயங்கிவரும் ஹூதிஸ் அமைப்பினர், அங்கிருந்தே இந்த ட்ரோன் விமானங்களை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan