2023 ஆம் ஆண்டின் கோடைகாலத்தின் போது 5,000 பேர் பலி!
8 மாசி 2024 வியாழன் 08:44 | பார்வைகள் : 9146
கடந்த வருடன் கோடைகாலத்தின் போது வெப்பம் காரணமாக 5,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பொது சுகாதாரத்துறை பெப்ரவரி 8, இன்று வியாழக்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளது. பிரான்சில் கடந்த கோடைகாலத்தின் போது சம்பவத்த மொத்த மரணங்களில் நூற்றில் மூன்று மரணங்கள் கடும் வெப்பம் காரணமாக இடம்பெற்றுள்ளது. குறிப்பாக உயிரிழந்தவர்களில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களே பெரும்பாலானவர்கள்.
சென்ற கோடைகாலத்தின் போது பல நாட்கள் அதிக வெப்பத்துடன் கழிந்திருந்தது. குறிப்பாக Toulouseநகரில் 42.4 °C வரை வெப்பம் (ஓகஸ்ட் 23, 2023) பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan