ஜனவரி 3 திட்டமிடப்பட்டிருந்த அமைச்சரவை கூட்டம் இரத்து! - காரணம் தெரிவிக்கப்படவில்லை!
1 தை 2024 திங்கள் 11:47 | பார்வைகள் : 19237
புதிய ஆண்டில் முதன்முறையாக ஜனவரி 3 ஆம் திகதி கூட இருந்த அமைச்சரவை (Conseil des ministres) கூட்டம், காரணம் தெரிவிக்கப்படாமல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
சில முக்கியமான முடிவுகளை எட்டவும், அமைச்சர்களின் பதவிகளை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படும் இந்த அமைச்சரவைக் கூட்டம், இரத்துச் செய்யப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதேவேளை, அரசாங்க தரப்பில் அதற்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மீண்டும் இந்த அமைச்சரவைக் கூட்டம் வருகின்றன ஜனவரி 10, புதன்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்வார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan