Hauts-de-Seine : ஜனாதிபதியின் மகன் வீட்டில் கொள்ளை!!
31 மார்கழி 2023 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 20396
காங்கோ குடியரசு (République du Congo) ஜனாதிபதியின் மகன் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. Neuilly, (Hauts-de-Seine) நகரில் உள்ள வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 23 தொடக்கம் 26 ஆம் திகதி வரையான நாட்களில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், சம்பவத்தின் போது ஜனாதிபதி Denis Sassou Nguesso இன் மகன் வீட்டில் இருக்கவில்லை எனவும் அறிய முடிகிறது.
பூட்டியிருந்த வீட்டினை உடைத்த கொள்ளையர்கள், 18,000 யூரோ, 6,000 டொலர்ஸ் பணமும், சில விலையுயர்ந்த தோல் பொருட்களும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவ் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகைப்படத்தில் : காங்கோ குடியரசின் ஜனாதிபதி மற்றும் அவரது மகன்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan