Paristamil Navigation Paristamil advert login

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........

15 தை 2024 திங்கள் 10:31 | பார்வைகள் : 9406


கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.

பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை. தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும்.கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்