இஸ்லமிய பள்ளிவாசலை தீயிட்டு எரிக்க முற்பட்ட ஒருவர் கைது!!

13 தை 2024 சனி 19:27 | பார்வைகள் : 12380
இஸ்லாமிய பள்ளி வாசம் ஒன்றை தீவைத்து எரிக்க முற்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை Saint-Martin-des-Champs (Finistère) நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது நபர் ஒருவர் பள்ளிவாசலின் கதவை தீயிட்டு எரிக்க முற்பட்டுள்ளார்.
ஆனால் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறும் முன்னர் காவல்துறையினர் தலையிட்டு, குறித்த நபரைக் கைது செய்தனர்.
பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1