Valenton : ஒன்பது வெட்டுக்காயங்களுடன் ஒருவர் - உயிருக்கு போராட்டம்!!
12 தை 2024 வெள்ளி 13:21 | பார்வைகள் : 11849
ஒன்பது தடவைகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசின் தென்கிழக்கு புறநகரான Valenton இல் இச்சம்பவம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். ஒன்பது வெட்டுக்காயங்கள் அவரது உடலில் இருந்ததாகவும், அவர் Henri Mondor மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான நபரின் முன்னாள் காதலியின் தற்போதைய காதலனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
தாக்குதல் மேற்கொண்டவர் மறுநாள், நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan