இஸ்ரேல் : தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான தேசிய அஞ்சலி! - விரைவில் திகதி அறிவிப்பு!!
8 மார்கழி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 11969
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 40 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேசிய அஞ்சலி மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியளித்த மக்ரோன், "அடுத்த வாரத்தில்" அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
"நிச்சயமாக, எங்களை சென்ற அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். அவர்களின் குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து தேதியை முடிவு செய்வேன்" என ஜனாதிபதி மக்ரோன் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan