Meaux : பெண் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் சடலமாக மீட்பு! - கணவன் தலைமறைவு!!
26 மார்கழி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 24018
வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Meaux (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. 9 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டது. பின்னர் அங்கு பெண் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் கட்டிலில் உயிரிழந்து சடலமாக கிடப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
38 வயதுடைய அப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் தேடப்பட்டு வருகிறார். அவரை காவல்துறையினர் முன்னதாகவே குடும்ப வன்முறையினால் அறியப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan