Argenteuil : பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இரு முதியவர்கள் பலி!
24 ஐப்பசி 2023 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 22272
மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Argenteuil நகரில் உள்ள l'hôpital Victor-Dupouy மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 93 மற்றும் 95 வயதுடைய இரு மூதாட்டிகள் பத்து நாட்களுக்கு முன்பாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களது உயிரிழப்புக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தொடர்பு உள்ளதா என மருத்துவத்தரப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள அந்நகர காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan