இஸ்ரேல் மீதான தாக்குதலில் பிரெஞ்சுப் பெண் ஒருவர் பலி!

8 ஐப்பசி 2023 ஞாயிறு 16:37 | பார்வைகள் : 14123
இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பிரெஞ்சுப் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் வசிக்கும் பல பிரெஞ்சு மக்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பிரான்சின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பிரெஞ்சுப் பெண் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் விபரம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கொல்லப்பட்ட பெண்ணின் விபரங்களை சேகரிக்க உள்துறை அமைச்சகம் முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1