ஜனாதிபதி உரை - எலிசே மாளிகையில் இருந்து நேரலை
23 புரட்டாசி 2023 சனி 18:15 | பார்வைகள் : 18047
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கான உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இருந்து இந்த உரை தொலைக்காட்சி வழியாக அஞ்சல் செய்யப்பட உள்ளது.
நாளை, செப்டம்பர் 24 ஆம் தகதி, இரவு 8 TF1 மற்றும் France 2 தொலைக்காட்சிகள் வழியாக இந்த உரை இடம்பெற உள்ளது.
சாள்ஸ் மன்னர் பிரான்சுக்கு மூன்று நாட்கள் அரசபயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார். பரிசுத்த பாப்பரசர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை சற்று முன்னர் நிறைவு செய்துள்ளார். ரக்பி உலகக்கிண்ண போட்டி பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. அதேவேளை, அடுத்த வாரத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட உள்ளது.
இத்தனை பரபரப்புகளுக்கு இடையே இந்த ஜனாதிபதியின் இந்த உரை மிக அவசியமான ஒன்றாக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan