பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து! - 20 கிலோ போதைப்பொருள் மீட்பு!
25 புரட்டாசி 2023 திங்கள் 12:02 | பார்வைகள் : 15883
காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்துக்குள் இருந்து 20 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் rue de Lagny வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். ஆனால் மகிழுந்து கட்டுப்பாட்டை மீறி உறுமிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. அதன்போது கட்டுப்பாட்டை இழந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த மகிழுந்துகள் சிலவற்றையும் இடித்து சேதப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பயணித்தது.
இதனால் காவல்துறையினர், மகிழுந்தை துரத்திச் சென்றனர்.
இந்த துரத்தல், Montreuil (Seine-Saint-Denis) நகர் வரை நீடித்தது. மகிழுந்து மடக்கிப்பிடிக்கப்பட்டு அதன் சாரதியான 28 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். மகிழுந்துக்குள் 19.24 கிலோ எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan