பாரிஸ் Porte d'Aubervilliers பகுதியில் தீ விபத்து இருவர் ஆபத்தான நிலையில்.
25 புரட்டாசி 2023 திங்கள் 08:25 | பார்வைகள் : 11509
பாரிஸ் Porte d'Aubervilliers பகுதியில் Boulevard Ney வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மற்றும் ஆறுபேர் லேசான காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என பாரிஸ் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளானர்
தீயை அணைப்பதற்கு 45 இயந்திரங்கள், மற்றும் 120 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு. அதிகாலை 5:15க்கு ஏற்பட்ட தீ காலை 8:00 மணிக்கே தீயணைப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன .
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan