ட்ராம் சாரதியுடன் வாக்குவாதம் - துப்பாக்கிச்சூடு நடத்திய நால்வர்
21 புரட்டாசி 2023 வியாழன் 17:03 | பார்வைகள் : 13346
ட்ராம் ஒன்றில் பயணித்த நால்வர் கொண்ட குழு ஒன்று, அதன் சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
Nantes நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1.30 மணி அளவில் நான்கு ஆண்கள் ட்ராமில் ஏறியுள்ளனர். அவர்கள் ட்ராமில் இடைவிடாது சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்தனர். அதையடுத்து ட்ராமின் சாரதி அவர்களை கீழே இறங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் பெரும் கைகலப்பாக மாறியுள்ளது.
திடீரென துப்பாக்கி ஒன்றை உருவி எடுத்த அவர்கள், அங்கும் இங்குமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டினால் ட்ராமின் கூரை மற்றும் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. ட்ராமில் பத்து வரையான பயணிகள் இருந்தபோதும் அவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படவில்லை. பின்னர் குறித்த நால்வரும் ட்ராமில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் Nantes நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan