Paristamil Navigation Paristamil advert login

அபாயம்! மீண்டும் கொரோனா - தடுப்பூசி ஆரம்பம்!!

அபாயம்! மீண்டும் கொரோனா - தடுப்பூசி ஆரம்பம்!!

14 புரட்டாசி 2023 வியாழன் 16:52 | பார்வைகள் : 19156


அவசர சிகிச்சையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதையடுத்து மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த அவரசரசிகிச்சை வைத்தியர்களான SOS Médecins பிரான்சில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அடுத்தகட்ட கொரோனாத் தடுப்பூசிகள் ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 3ம் திகதிக்குள் 3488 பேரிற்கும், கடந்த வாரமான செம்டெம்பர் 4ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடையில் 4067 பேரிற்கும் கொரோனா  உறுதி செய்யாப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.