அயர்லாந்து பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த கதி
17 புரட்டாசி 2023 ஞாயிறு 08:45 | பார்வைகள் : 14360
உனவட்டுன யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்ற 38 வயதான அயர்லாந்து பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதற்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததற்காக ஊழியரும் அதற்கு உதவியதற்காக உரிமையாளரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று (16) குறித்த நிலையத்துக்கு மசாஜ் செய்வதற்காக சென்றபோதே சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan