Niger : சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் விடுதலை
14 புரட்டாசி 2023 வியாழன் 12:02 | பார்வைகள் : 14958
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Niger இல் சிறைவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுநபர் ஒருவர் தற்போது விடுலை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறைஅமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Stéphane Jullien எனும் பிரெஞ்சு நபர் கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி அன்றுNiger இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் Niger நாட்டில் உள்ள பிரெஞ்சு நாட்டவர்களுக்கான ஆலோசகராகசெயற்பட்டு வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று புதன்கிழமை அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சுவெளியுறவுத்துறை அமைச்சர் Anne Claire Legendre இன்று வியாழக்கிழமைஅறிவித்தார்.
Niger நாட்டில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி இராணுவ சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்புஇடம்பெற்றிருந்தது. அதன்பின்னர் பிரான்சுக்கும் Niger இற்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan