Paristamil Navigation Paristamil advert login

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமானார்

 வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் காலமானார்

14 புரட்டாசி 2023 வியாழன் 08:57 | பார்வைகள் : 8980


வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்