Paristamil Navigation Paristamil advert login

வியாபாரியும் மனைவியும்!

வியாபாரியும் மனைவியும்!

26 மாசி 2013 செவ்வாய் 09:15 | பார்வைகள் : 17967


ஒரு வியாபாரி இரண்டு ஆண்டுகள் அயல்நாட்டுப் பயணத்தில் அயராது உழைத்து ஏகப்பட்ட பணத்துடன் வீடு திரும்புகிறார்.

 
அங்கு அவரது மனைவியின் கையில் அழகான பிறந்த குழந்தை இருந்தது.
 
வியாபாரி ஏற்கனவே சந்தேகப்பிராணி! இதைப்பார்த்தவுடன் ஏகப்பட்ட கடுப்பானார்.
 
இந்தக் குழந்தையின் தந்தையைக் கண்டுபிடித்து பழிவாங்க அவரது மனம் துடித்தது.
 
இந்தக் குழந்தையின் தகப்பன் யார்? உண்மையைச் சொல்லு என் நண்பன் பாண்டியா?
 
மனைவி அழுதுகொண்டே இல்லை
 
பின்ன யாரு எப்பப் பாரு என் கூடவே சுத்துவோனே மாணிக்கமா?
 
இல்லை! என்றால் விசும்பியபடியே!
 
பின்ன யாரு? இப்ப சொல்லப்போறியா இல்லியா?
 
நீங்க என்ன ஒரு ஆணாதிக்கவாதி! உங்க பிரெண்டாத்தான் இருக்கணுமா? ஏன் என் பிரெண்டா இருக்கக்கூடாதா?