Élancourt விபத்து - மேலதிக சிகிச்சைகளுக்காக துருக்கி அழைத்துச்செல்லப்படும் சிறுவன்
9 புரட்டாசி 2023 சனி 02:07 | பார்வைகள் : 12058
காவல்துறை மகிழுந்துடன் இளைஞன் ஒருவன் மோதுண்ட விபத்தில், பலத்தகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞன், மேலதிகசிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளான்.
Élancourt நகரில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த 17 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான். குறித்த இளைஞனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த இளைஞனது பெற்றோர்கள், மேலதிக சிகிச்சைக்காகஇளைஞனை தங்கள் நாட்டுக்கே அழைத்துச் செல்ல விரும்புவதாகதெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அவர்கள் காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan