Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிகவும் பழமையான குகையில் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!

உலகின் மிகவும் பழமையான குகையில் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு!

31 ஐப்பசி 2021 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 15572


உலகில் மிகவும் பழமையான குகையில் வரையப்பட்ட விலங்கின் ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
சுலவேசி தீவில் உள்ள குகை ஒன்றினை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது குகையில் பன்றியின் மற்றும் மானின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலும் சிதலமடைந்திருந்த ஓவியங்களை ஆய்வு செய்தபோது, அவை ஓடுவது போல வரையப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இந்த ஓவியங்கள் 45 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானவை என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.