உலகத்திலேயே 2வது உயரமான மரம் சீனாவில் கண்டுபிடிப்பு
12 ஐப்பசி 2022 புதன் 10:15 | பார்வைகள் : 12498
உலகத்திலேயே 2வது மிக உயரமான மரம் சீனாவின் சியாச்சி பகுதியான திபெத்தில் உள்ள வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் வயது சுமார் 380 ஆண்டுகள் என்று தாவரவியல் சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காலம் காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வரும் இந்த பகுதி தற்போது சுயாட்சி தகுதி பெற்ற ஒரு நிலப்பரப்பு. அமைதி மற்றும் பசுமைக்கு பெயர்பெற்ற திபெத்திற்கு தற்போது புதிய சாதனை ஒன்று சொந்தமாகியிருக்கிறது.
உலகத்திலேயே 2வது மிக உயர்ந்த மரம் திபெத் அடர்வனத்தில் இருப்பதை சீன தாவரவியல் நிபுணர்கள் துல்லியமாக அளவிட்டு பதிவு செய்துள்ளனர்.
திபெத்தில் ஸாயூ மாவட்டத்தில் 250 அடிக்கு மேல் வளர்ந்த ஏராளமான மரங்கள் இருப்பதை அறிந்த சீனாவின் பல்வேறு தாவரவியல் ஆய்வு நிறுவனங்கள், அவற்றை அளவிடும் கூட்டு நடவடிக்கையில் இறங்கின. அப்போது வெர்ஜின் பாரஸ்ட் பகுதியில் உள்ள 'Abies ernestil' வகையை சார்ந்த மரம் ஒன்று 83.4 மீட்டர் அதாவது 273 அடி உயரம் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் வயது 350 ஆண்டுகள் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சீன வரலாற்றை முதன்முறையாக அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மரத்தினை தாவரவியல் நிபுணர்கள் அளவீடு செய்து படம் பிடித்ததுடன் அதன் செல் மாதிரிகளை சேகரித்து பாதுகாத்துள்ளனர்.
அதிநவீன டிரோன்களின் உதவியுடன் மரத்தின் உயரத்தை அவர்கள் துல்லியமாக அளவிட்டுள்ளனர். இந்த மரத்தின் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட பிற தாவர வகைகள் வளர்ந்திருப்பதையும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட மரத்தின் பல்வேறு பகுதிகளை 160 படங்களாக பதிவு செய்து ஆய்வாளர்கள், அவற்றையெல்லாம் தொகுத்து ஒரே படத்தை உருவாக்கியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan