நெஞ்செல்லாம் நீ

10 கார்த்திகை 2016 வியாழன் 23:01 | பார்வைகள் : 15000
காலங்கள் கடந்தாச்சு
கனவுகள் கலைந்தாச்சு
நினைவுகள் மட்டும். .....!
நீங்கவில்லை
உனக்கும் எனக்கும்
உள்ளது நட்ப்போ...?
இல்ல. .......!
சொல்ல தெரியல
புரியாமல் போனாயோ
புதிர் போடுகின்றாயோ
பதிலேதும் சொல்லாது - நீ
பயணித்தது எங்கே.
விழி மூடி தூங்கும் போது
விடைதேட துடிக்கிறது
இதயம்......! ஆனால்
மௌனம் கொண்ட மனமோ
தனக்குள் உன் நினைவை
நிலைநாட்ட பார்க்கிறது.
கனவாகிப்போன காலமாக
கலைத்து விட முடியவில்லை
நிலையாய் என்றும் - நீ
நிலை கொண்டாய் என்னுள்
வரமாக எண்ணுகிறேன் - நீ
சுயம் வரம்தான் என்றும்
-றொபின்சியா
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1