தனிமையில் நான் !

15 புரட்டாசி 2019 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 14229
தனிமையில் நிற்கிறேன் நான்...!
கடந்து செல்வோர் பலர்
காரணம் கேட்டு நகர்கின்றனர்...!
துரோகமெனும் வெயிலும்
ஏமாற்ற மழையும் - என்
உயிர் எரித்து நனைக்கிறது...!
கதறி அழ நினைத்தாலும்
கண்ணீர் துளிகளை
இமைகளுக்கிடையில்
இறுக்கி பதுக்கிக்கொள்கிறேன்...!
காலங்கள் கடந்து சென்றாலும் - என்
கால்கள் கடக்க வழி தெரியவில்லை...!
மனம் கனக்கும் - உன்
நினைவு பொதியுடன்
தனிமையிலே நிற்கிறேன் நான்...!
நீ விட்டுச்சென்ற
அதே இடத்தில்...
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1