மரம் ...!

6 கார்த்திகை 2021 சனி 16:15 | பார்வைகள் : 15446
நின்ற
இடத்தில்
நின்று கொண்டு ....
காற்றடித்தால்
மட்டுமே
தலையசைத்துச்
சிரித்து ...
யாரும்
தன்னை
அரவணைக்காத
போதும் ...
அலட்டிகொள்ளது
அமைதி காத்து ...
முற்றிலுமாய்
இலையுதிர்ந்து
போனாலும் ...
மேகம் பார்த்து
மேகம் பார்த்து
நாளை என்ற
நம்பிக்கை வளர்த்து ....
வளர்த்த
நம்பிக்கையில்
உயிர் காத்து ....
மீண்டும்
தளைத்துச்
செழித்து ...
பேசாமல்
மரமாகவே
பிறந்திருக்கலாம் ....
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1