Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சூதாட்ட விடுதி முற்றுகை - 10 பேர் கைது!

இலங்கையில் சூதாட்ட விடுதி முற்றுகை - 10 பேர் கைது!

23 வைகாசி 2026 சனி 13:03 | பார்வைகள் : 1134


பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கிவந்த சூதாட்ட விடுதி முற்றுகையிடப்பட்டதுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, இன்று சனிக்கிழமை காலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த முற்றுகையின் போது சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான பணமும் மற்றும் பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.