Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயினில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

ஸ்பெயினில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

19 வைகாசி 2026 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 995


தெற்கு ஸ்பெயினில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேக நபர் தனது பெற்றோரையே இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் சந்தேக நபரின் ஏழு மாத மகனும் அடங்குவார், காயமடைந்த நான்கு பேரின் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் மற்றொரு 18 மாதக் குழந்தையும், 60 வயது முதியவர் ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை