நைஜீரிய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயங்கரவாத தாக்குதல் - 17 பொலிஸார் பலி
18 வைகாசி 2026 திங்கள் 08:50 | பார்வைகள் : 1922
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபே (Yobe State) பகுதியில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 17 பொலிஸார் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனி யாடி (Buni Yadi) பகுதியில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி நிலையம் மீது கடந்த வெள்ளிக்கிழமை 15.5.2026 பல திசைகளில் இருந்து ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நைஜீரிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் அந்தோணி ஒகோன் பிளாசிட் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் இராணுவ வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
நைஜீரியாவில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலின் பின்னணியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு தொடங்கிய போகோ ஹராம் (Boko Haram) இயக்கத்தின் எழுச்சிக்குப் பின்னர், அதன் பிரிவாக உருவான இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் (Islamic State West Africa Province) போன்ற அமைப்புகளும் பிராந்தியத்தில் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதல் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், லேக் சாட் படுகையில் அமெரிக்கா மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த தளபதியின் மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
நைஜீரிய பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்தில் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan